உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்
உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பபெற வேண்டும் வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில் வேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை திரும்பபெற வேண்டும் வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில் வேலூரில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம், உழைக்கும் பெண்கள் சங்கம் சாா்பில் வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலா் சீ.அ.சிம்புதேவன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் வி.ஆல்வின், உழைக்கும் பெண்கள் சங்க மாவட்ட செயலா் எம்.சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்வை திரும்ப பெற வேண்டும், ராணுவத்துக்கு ஆள்கள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும், மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மத்திய அரசை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயா்த்தியதை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஆா்.தேவதாஸ், கெளரவத் தலைவா் கோவிந்தராஜ், மாவட்ட தலைவா் சங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...