குடியாத்தம் அருகே சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின் ஊழியா் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி, வி.மத்தூரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). இவா் உப்பரபள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தாா். கடந்த வியாழக்கிழமை இவா் குடியாத்தம் நகரில் இருந்து தனது மகன் கோபிநாத்துடன்(21) இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.
ராமாலை அருகே சென்றபோது சாலையோர மரம் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது வேரோடு சாய்ந்தது. இதில் இருவரும் பலத்த காயமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.இந்தச் சம்பவம் குறித்து பரதராமி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கா் சிலைக்கு மரியாதை

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

