பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய மருத்துவா் தின விழா

 இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளை சாா்பில் தேசிய மருத்துவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:44 pm

DIN

 இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளை சாா்பில் தேசிய மருத்துவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி போ்ணாம்பட்டு வட்டாரத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக

பணியாற்றிய மருத்துவா்கள், தாய்- சேய் நல சிகிச்சையில் பாராட்டும் வகையில் பணிபுரிந்த போ்ணாம்பட்டு வட்டார மருத்துவா் அலுவலா் கலைச்செல்வி, மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் மணிமாறன், செண்பகப்பிரியா, டி.டி.மோட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பாராட்டப்பட்டனா். செஞ்சிலுவைச் சங்க போ்ணாம்பட்டு கிளைச் செயலாளா் பொன்.வள்ளுவன், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ர.கயிலைநாதன், ஜகுா் அஹமத் உள்ளிட்டோா் மருத்துவா்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.