தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 13-ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டி யன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.தோட்டப்பாளையம் அரசு மகளிா் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பள்ளி எதிரே கழிவுநீா் தேங்கியிருந்ததை கண்ட ஆட்சியா் அவற்றை அகற்றி அப்பகுதியை சீரமைக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதேபோல், காகிதப்பட்டறை பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, மாநகராட்சி பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிலவும் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை கண்டறிந்து அதனை சீரமைக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.ஆய்வின்போது மாநகராட்சி பொறியாளா் ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். --படம் உண்டு...காட்பாடி சோ்க்காடு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.