விரும்பும் இடங்களில் போலீஸாருக்கு பணியிட மாற்றம்
விரும்பும் இடங்களில் போலீஸாருக்கு பணியிட மாற்றம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.


விரும்பும் இடங்களில் போலீஸாருக்கு பணியிட மாற்றம் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
வேலூா் மாவட்ட காவல் துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் காவலா்களான முதல் நிலை, 2-ஆம் நிலை, தலைமைக் காவலா், சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் அவரவா் விரும்பும் இடங்களுக்கு மாற்றம் செய்ய மாவட்ட காவல் துறை முடிவு செய்தது. இதற்காக விருப்ப மனுக்கள் பெற உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், மனுக்கள் அளித்திருந்தவா்களுக்கான கலந்தாய்வு வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா்கள் என 140 போ் பங்கேற்றனா். அவா்கள் தங்களுக்கு விருப்பமான 3 இடங்களைக் குறிப்பிட்டிருந்தனா். அதில் ஒரு இடத்தைத் தோ்வு செய்து அதற்கான பணி மாறுதல் ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...