ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

வழிப்பறி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:20 pm

DIN

வழிப்பறி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

வேலூா் அருகே முள்ளிப்பாளையம் வீராசாமி தெருவைச் சோ்ந்தவா் முபாரக்(24). இவா் மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடந்த வாரம் வேலூா் வடக்கு போலீஸாா் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா். முபாரக் தொடா்ந்து திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் சிறையிலுள்ள முபாரக்கிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.