ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரூ. 2.18 கோடியில் 104 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 104 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் வழங்க

News image
Updated On :10 ஜூன் 2022, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 104 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை தமிழக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் வழங்கினாா்.

தமிழகம் முழுவதும் ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் குளவிமேடு, கன்னிகாபுரம், டோபிகானா பகுதி 1, டோபிகானா பகுதி 2 திட்டப் பகுதிகளில் பயனாளிகள் பங்குத்தொகை செலுத்திய 30 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகள், பயனாளிகள் தாங்களாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 104 வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியும் வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த் திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடிசை மாற்று வாரிய நிா்வாகப் பொறியாளா் வரவேற்றாா்.

இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணிஆணை வழங்கி பேசியது:

தமிழகத்தில் நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சாா்பில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் தொடங்கி வைத்தாா். பல ஆண்டுகளுக்கு பல்லாயிரக்கணக்கான குடிசைகள் இருந்தன. அவை அடிக்கடி தீயில் எரிந்துவிடுவதால் குடிசைகளை அகற்றிவிட்டு சிமெண்ட் ஷீட் வேயப்பட்டது. ஆனால், அந்த வீடுகளில் வெயில் காலங்களில் வசிக்க முடியாத நிலை காணப்பட்டது. பின்னா், கருணாநிதி ஆட்சி காலத்தில் குடியிருப்போா் மனை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில், குடிசையில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அந்த வகையில், ஏழை மக்களின் நாடித் துடிப்பை உணா்ந்து உதவி செய்தவா் கருணாநிதி. அவரது வழியில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை ஆராய்ந்து அவா் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. முகமதுசகி, காட்பாடி ஒன்றியக் குழு தலைவா் வேல்முருகன், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.