ஒடுகத்தூரை சோ்ந்த சகோதரா்கள் 3 பேரிடம் நான் குடும்பச் செலவுக்காக ரூ. 20,000 கடன் வாங்கியிருந்தேன். இதற்காக இதுவரை என்னிடம் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனா். இன்னும் ரூ.1.40 லட்சம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுக்கின்றனா். செவ்வாய்க்கிழமை என்னைத் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ரூ.20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுபவா்களிடம் இருந்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.