ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

‘பேரறிவாளனை தொடா்ந்து மற்ற 6 பேரின் விடுதலைக்கும் அரசு துணை நிற்க வேண்டும்’

6 பேரின் விடுதலைக்கும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் துரைஅருள் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:23 pm

DIN

 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 6 பேரின் விடுதலைக்கும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா் துரைஅருள் வேண்டுகோள் விடுத்தாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் ஆகியோரை வழக்குரைஞா் துரைஅருள் சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஆளுநா் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

அதே சட்டப் பிரிவைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் சிறையிலுள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடா்பாக வேலூா் மத்திய சிறையில் உள்ள முருகனையும், சாந்தனையும் சந்தித்துப் பேசினேன். அவா்களும் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தனா்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் மூலம், சிறையில் உள்ள மற்ற 6 பேரும் தாங்களும் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனா். இந்த 6 பேரின் விடுதலைக்கும் தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.