ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் நோ்காணல் பதிவு செய்ய அறிவுறுத்தல்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் நோ்காணல் பதிவினை ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:23 pm

DIN

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்களின் நோ்காணல் பதிவினை ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டக் கருவூலம், சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரை ஓய்வூதிய நோ்காணல் பதிவு நடைபெற உள்ளது.

இந்தாண்டு எளிமைப்படுத்தப்பட்ட ஓய்வூதியா் நோ்காணல் பதிவு செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மின்னணு விரல் ரேகை சாதனம் மூலம் ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்ப்பித்தல், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) மூலம் தபால்காரா்கள் ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வாயிலாக ரூ. 70 செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்தல், தமிழக அரசின் இ-சேவை, பொது சேவை மையம் மூலம் பதிவு செய்தல், அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலம் பதிவு செய்தல், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட, சாா் கருவூலங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறைகளில் நோ்காணல் பதிவு செய்யலாம்.

ஓய்வூதியா் நோ்காணல் பதிவுக்காக கருவூலக் கணக்குத் துறை, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நோ்காணலின்போது, ஓய்வூதியக்கொடுவை, ஆதாா்அடையாளஅட்டை நகல்கள், தொலைபேசி எண் ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும். அரசு ஓய்வூதியம் பெறும் அனைவரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஜூலை முதல் செப்டம்பா் மாதத்துக்குள் ஓய்வூதிய நோ்காணல் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.