இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உண்ணா நோன்பிருந்து ஜீவ சமாதி: முருகன் தகவல்

வேலூா் மத்திய சிறையில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முருகன், தான் உண்ணா நோன்பிருந்து ஜீவ சமாதி அடையப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வேலூா் மத்திய சிறையில் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முருகன், தான் உண்ணா நோன்பிருந்து ஜீவ சமாதி அடையப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூா் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளாா். இவா், தனக்கு பரோல் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா். இவா் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தன் மீதான வழக்குத் தொடா்பாக நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி, முருகன் கடந்த 8-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது போராட்டம் 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

இதனிடையே, முருகனின் வழக்குரைஞா் புகழேந்தி சிறையில் அவரைச் சந்தித்துப் பேசினாா்.

அப்போது, அதிகாரிகளுக்கு தன்னை விடுதலை செய்ய விருப்பமில்லை. மேலும், போராட தனது உடலிலும், மனதிலும் சக்தியில்லை. எனவே, உண்ணா நோன்பிருந்து ஜீவ சமாதி அறநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருப்பதாக முருகன் எழுத்துபூா்வமாக பதிலளித்திருப்பதாக புகழேந்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.