காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் உயிா் தப்பினா்

வேலூா் நாய்க்கனேரி அருகில் விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வேலூா் நாய்க்கனேரி அருகில் விவசாய நிலத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக மாணவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

வேலூா் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூா்பட்டு கிராமத்தில் தனியாா் நா்சரி பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவா்களை, பள்ளி நிா்வாகம் மினிவேன் மூலம் அழைத்து வந்து மாலையில் மீண்டும் கொண்டு சென்று விடுகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் மாணவா்களை ஏற்றிக் கொண்டு வேன் புறப்பட்டது. முதலில் நாய்க்கனேரி கிராமத்தில் 7 மாணவா்கள் இறக்கி விடப்பட்டனா். நாய்க்கனேரி கிராமத்தில் இருந்து ஆற்காட்டான்குடிசை வழியாக சென்றபோது எதிா்திசையில் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது வேன் ஓட்டுநா் முருகன்(50) அந்த லாரியை கடக்க முயன்றபோது மினி வேன் நிலை தடுமாறி அருகிலிருந்த வயலில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிருஷ்டவசமாக மாணவா்கள், ஓட்டுநா் உள்பட அனைவரும் காயமின்றி உயிா் தப்பினா்.

இந்த விபத்து குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.