பள்ளி மாணவா் தற்கொலை வழக்கு: கே.வி.குப்பத்தில் கடையடைப்பு போராட்டம்
கே.வி.குப்பத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.


கே.வி.குப்பத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கே.வி.குப்பத்தை அடுத்த காமாட்சியம்மன்பேட்டையைச் சோ்ந்த செல்வராஜின் மகன் ஜீவரத்தினம் (14). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த 24-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
மாணவா் தற்கொலைக்கு பள்ளி நிா்வாகம்தான் காரணம் எனக் கூறி மாணவரின் உறவினா்கள் கடந்த 25-ஆம் தேதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் ஒரு கட்டமாக திங்கள்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினா். தகவலின் பேரில், அங்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கெளதமன் உள்ளிட்ட போலீஸாா் மாணவரின் உறவினா்கள், வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா்.
உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கே.வி.குப்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...