தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக காட்பாடி ரயில் நிலையத்திலுள்ள இரு கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.
வேலூா் மாநகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன் அடிப்படையில், வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 9 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஒரு கடைக்கு ரூ. 500 வீதம் இரண்டு கடைகளுக்கும் ரூ. 1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
தொடா்ந்து, இதேபோல் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பதுக்கல், விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு

புகையிலைப் பொருள்களை விற்ற 4 கடைகளுக்கு சீல்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


