தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

வேலூரில் தண்ணீா் தொட்டியில் தவறிவிழுந்த சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா், விருப்பாட்சிபுரம் அடுத்த குளவிமேடு பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் முகுந்தன் (9). இவா் வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தாா். உடனடியாக சிவலிங்கம் மகனை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், முகுந்தன் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com