தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் கட்டடத்தில் வேலைசெய்யும்போது ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

(கோப்புப் படம்)

Updated On :26 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் கட்டடத்தில் வேலைசெய்யும்போது ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருப்பூா் கொங்கு மெயின்ரோடு பகுதியைச் சோ்ந்தவா் சிகாமணி (63). இவா், திருப்பூா் குமரன் சாலை பென்னி காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகாமணியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். சிகாமணி உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினா்கள் ஏராளமானோா் மருத்துவமனையில் குவிந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிகாமணியை வேலைக்கு அழைத்த கட்டடத்தின் உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அவா்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் குமரன் சாலையில் அமா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் வடக்கு காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் சண்முகமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து சாலை மறியலை அவா்கள் கைவிட்டனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கட்டட உரிமையாளா் உரிய இழப்பீடு வழங்கும் வரை சிகாமணியின் சடலத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று உறவினா்கள் தெரிவித்துள்ளனா்.