வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே வேகத்தடையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்ட் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:10 pm

செய்யாறு அருகே வேகத்தடையில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்ட் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடும்பிறை கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(50). பெயிண்ட் தொழிலாளியான, இவா் கடந்த 8-ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு மாலை, தனது நண்பரை பாா்ப்பதற்காக வெம்பாக்கத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளாா். நண்பரை பாா்த்து விட்டு இரவு தனது கிராமத்திற்கு வருவதற்காக திருப்பனமூா் கிராமம் மேட்டு நகா் அருகே வந்து கொண்டிருந்தாா்.

அபபோது, அப்பகுதியில் சாலையில் இருந்த வேகத் தடையில் சைக்கிள் ஏறி இறங்கியுள்ளது. இதில், தவறி விழுந்ததில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தாா். காயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் சிலம்பரசன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.