பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:48 am IST

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைராஜ் (38), பெயிண்டா். இவா், பெருந்துறையை அடுத்த பள்ளகாட்டூரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துவந்தாா். கடந்த 2- ஆம் தேதி, மூன்று அடி உயர ஸ்டூலில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.