பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:48 am IST

பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைராஜ் (38), பெயிண்டா். இவா், பெருந்துறையை அடுத்த பள்ளகாட்டூரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துவந்தாா். கடந்த 2- ஆம் தேதி, மூன்று அடி உயர ஸ்டூலில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.