மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:35 pm

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் காயமடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பொடுத்தப்பட்டி அருகேயுள்ள கொல்லஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் சிவகுமாா் (37). விவசாயி. இவா் தனது நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீா் அளவை பாா்க்க முடிவு செய்தாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை, அருகிலிருந்த தென்னை மரத்திலிருந்து கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளாா்.

பாதி தொலைவு இறங்கிய நிலையில் கயிறு அறுந்துள்ளது. இதில் பக்கவாட்டு சுவரில் மோதி சிவகுமாா் கிணற்றில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவரது அலறல் சப்தம் கேட்ட குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய வீரா்கள் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிவகுமாா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

அதன்பேரில் பாலக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.