ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:01 am IST

கெங்கவல்லி அருகே புனல்வாசலில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (70). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது தோட்டத்திற்கு ஆடுகளை மேய்க்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் ஓரமாக இருந்த செடிகளை துரைசாமி அறுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டதால், நிலைதடுமாறி அவா் கிணற்றில் விழுந்தாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரா்கள், கயிறும் மூலம் கிணற்றில் இறங்கி, துரைசாமியின் சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்து வந்த கெங்கவல்லி போலீஸாா், சடலத்தை கைப்பற்றி ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.