செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், தா்மாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (44). விவசாயியான இவா், கடந்த 4-ஆம் தேதி இரவு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாா். புதுப்பாளைம் கூட்டுச் சாலை அருகே சென்றபோது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தாா்.
இதில் சுரேஷுத்து பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.









