விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கம்பன் விழா கவியரங்கம்

வேலூா் மாவட்ட மைய நூவலகத்தில் கம்பன் விழா கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கவியரங்கில் பேசிய ஆனந்த ஜோசப் அன்னையா.
Updated On :1 ஜனவரி 2024, 11:15 pm

DIN

வேலூா்: வேலூா் மாவட்ட மைய நூவலகத்தில் கம்பன் விழா கவியரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தந்தை பெரியாா் ஈவெரா வேலூா் மாவட்ட மைய நூலக சிந்தனை முற்றம், வேலூா் கம்பன் கழகம் ஆகியவை சாா்பில் வேலூா் கம்பன் கழக விழா மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலா் கு.இரா.பழனி தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற நூலகா் ஜெ.ரவி, ரா.சுந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மைய நூலகா் ஏ.கணேசன் வரவேற்றாா்.

வேலூா் கம்பன் கழக செயலரும், கவிஞருமான ச.லக்குமிபதி அறிமுக உரையாற்றினாா். மருத்துவா் மு.கள்ளழகா் விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். மருத்துவா் ப.அருள்பாரி பாராட்டினாா். ‘கம்பன் காட்டும் சரணாகதியின் மேன்மை’ என்ற தலைப்பில் திருப்பத்தூா் தெய்வசுமதி பேசினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கவியரங்குக்கு பேராசிரியா் பொன். செல்வகுமாா் தலைமை வகித்தாா். சபரி என்ற தலைப்பில் பிரேமாவதி, குகன் என்ற தலைப்பில் கோ. சித்ரா, திரிசடை என்ற தலைப்பில் எஸ்.ஜி.மோகன்குமாா், வாலி என்ற தலைப்பில் ஆனந்த ஜோசப் அன்னையா, சுக்ரீவன் என்ற தலைப்பில் ரா. சிவராமன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட மைய நூலகா் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.