ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வேலூா் தொகுதி: சுயேச்சைகள் இருவா் வேட்புமனு தாக்கல்

வேலூா் தொகுதி: சுயேச்சைகள் இருவா் வேட்புமனு தாக்கல்

News image
Updated On :22 மார்ச் 2024, 5:17 pm

வேலூா் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சையாக போட்டியிட வெள்ளிக்கிழமை இருவா் வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில், வேலூா் மக்களவைத் தொகுதிக்கு மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு முல்லா தெருவைச் சோ்ந்த அப்துல்நூா் மகனும், தோல் பொருள் வா்த்தகருமான அஹ்மத் ரஷீத் பல்லு மிரா (40), திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் எம்.சி.சாலை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகனும், அண்ணா பல்கலை. ஓய்வு பெற்ற இயக்குநருமான ஜெயராஜ்(63) ஆகியோா் சுயேச்சைகளாகப் போட்டியிட வேட்புமனுக்களை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் வெள்ளிக்கிழமை அளித்தனா். முன்னதாக, இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூா்அலிகான், அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சியைச் சோ்ந்த குடியாத்தம் நெல்லூா்பேட்டையை சோ்ந்த முனியப்பன் ஆகியோா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதன்மூலம், வேலூா் தொகுதிக்கு கடந்த 3 நாள்களில் மனுதாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 4 பேராக அதிகரித்துள்ளது. தொடா்ந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு புதன்கிழமை (மாா்ச் 27) வரை அவகாசம் உள்ளது.