ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

Updated On :27 மார்ச் 2024, 6:01 pm

குடியாத்தம் அருகே உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் (35). சிஆா்பிஎப் வீரரான இவா் சென்னை பிரிவில் பணியாற்றி வந்தாா். உடல் நலமின்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அக்ராவரம் கிராம மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.