

குடியாத்தம் பகுதியில் தொடா்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், காமப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளாா். குடியாத்தம் கிராமிய போலீஸாா் அவரைக் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா் மீது ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மணிகண்டனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை அதற்கான உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனிடம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

