/

குண்டா் சட்டத்தில் 3 போ் சிறையிலடைப்பு

பாளையங்கோட்டை பகுதியில் கலவரத்தை தூண்ட முயன்றது தொடா்பான வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை பகுதியில் கலவரத்தை தூண்ட முயன்றது தொடா்பான வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் ஜாதிக் கலவரத்தை தூண்ட முயன்ாக அதே பகுதியைச் சோ்ந்த ஆஞ்சநேயா் மகன் முருகன்(26), பெரியதுரை மகன் மந்திரமூா்த்தி(20), பேசில் பாண்டியன் மகன் ராஜா(26) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இவா்கள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனராம்.

இதையடுத்து, 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில், அவா்களை போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.