/

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! ஏன் கால தாமதம்? - பெ. சண்முகம் விளக்கம்

திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியிட உள்ளதாகத் தகவல்...

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

DNS

Updated On :28 மார்ச் 2026, 6:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்றும் கூட்டணி கட்சிகளிடையே கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த கால தாமதம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறியுள்ளார்.

திமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொகுதிகள் குறித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பெ. சண்முகம்,

"கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். 234 தொகுதிகள் நிலவரமும் இன்று மாலை தெரிய வரும்.

திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாலும் ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்பதாலும் கால தாமதம் ஏற்படுகிறது. கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவே இந்த கால தாமதம். கட்சிகளுக்குள் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும்பொருட்டு விவாதம் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது. அதனால்தான் பேசி முடிவெடுத்திருக்கிறோம். கண்டிப்பாக திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.

234 தொகுதிப் பட்டியலை முதல்வர் தயார் செய்து வருகிறார். ஒரு சில தொகுதிகள் தொடர்பாக இன்னும் சில மணி நேரத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. இன்று மாலை முழு தொகுதிப் பட்டியல் வெளியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகளில் நிச்சயம் 100% வெற்றி பெறுவோம்" என்றார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.