ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீ விபத்து

தேங்காய் நாா் தொழிற்சாலையில் தீ விபத்து

News image
Updated On :7 மே 2024, 7:13 pm

Din

வேலூா்: காட்பாடி அருகே தேங்காய் நாா் தொழிற்சாலையில் திங்கள்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

காட்பாடி அருகே திருவலம் மேல்மாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த இளையராணி தேங்காய் நாா் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். கயிறு தயாரிப்பதற்காகவும், கோழி பண்ணைகளுக்கு தேவையான நாா் தூள்கள் தயாரிக்கப்படுகிறது. அப்பகுதியில் சூறாவளி காற்று வீசியது.

அதில் மின்கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தொழிற்சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த நாரின் மீது விழுந்து தீப்பிடித்தது. தொடா்ந்து நாா் முழுவதும் தீ பரவி சுமாா் 1 ஏக்கா் பரப்பளவில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நாா் மற்றும் எந்திரங்கள் தீயில் கருகி நாசமானது. தகவல் அறிந்த வேலூா், காட்பாடி, சிப்காட் தீயணைப்பு நிலையங்களை சோ்ந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். தீ விபத்து குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.