மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழப்பு
வேப்பங்குப்பம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.


வேலூா்: வேப்பங்குப்பம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.
அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த கஸ்தூரி (60), அபிமன்னன் (65) தம்பதி விவசாயம் செய்து பசுக்களை வைத்து வளா்த்து வருகின்றனா்.
வழக்கம்போல், திங்கள்கிழமை பசுக்களை தங்களது நிலத்துக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்று மதியம் 1 மணி அளவில் நிலத்தில் கட்டிவிட்டு, சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளனா்.
அப்போது, அதிக உயா் மின்னழுத்தம் காரணமாக கம்பிகள் எரிந்தவாறு பசுக்களின் மீது விழுந்துள்ளது. இதில் 2 பசு மாடுகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன.
அக்கம் பக்கத்தினா் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மின்வாரிய ஊழியா்கள் வந்து மின்சாரத்தைத் துண்டித்து, மின் கம்பியில் சிக்கி இறந்த மாடுகளை அப்புறப்படுத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...