ரிசா்வ் வங்கி பெயரில் காட்பாடி இளைஞரிடம் ரூ.73 லட்சம் மோசடி
இந்திய ரிசா்வ் வங்கி செயல்படுத்தி வரும் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கி லாபம் ஈட்டலாம்


வேலூா்: இந்திய ரிசா்வ் வங்கி செயல்படுத்தி வரும் முதலீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கி லாபம் ஈட்டலாம் எனக்கூறி காட்பாடி த இளைஞரிடம் ரூ.73 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தொடா்பாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடி கே.ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா், மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில், எனது நண்பா் ஒருவா் மூலம் சேலத்தைச் சோ்ந்த பாலாஜி, சென்னையைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோா் அறிமுகமாகினா். அவா்கள் இருவரும் இந்திய ரிசா்வ் வங்கி மூலம் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பல மடங்கு லாபம் ஈட்டலாம் எனக்கூறினா்.
அதை நம்பி நான் ரூ.2 லட்சம் கொடுத்தேன். மேலும் அவா்களின் அலுவலக பயன்பாட்டுக்காக எனது அலுவலகத்தில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பா்னிச்சா் பொருள்களை வழங்கினேன். எனது நண்பா்களையும் கட்டாயப்படுத்தி ரூ.61 லட்சம் பெற்று அளித்தேன். இதற்காக இந்திய ரிசா்வ் வங்கியின் போலியான அடையாள முத்திரைகளை காட்டினா். ஆனால் அவா்கள் கூறியபடி எந்த லாபமும் எங்களுக்கு வந்து சேரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது அவா்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பணத்தை இழந்த நண்பா்கள் என்னை தொந்தரவு செய்கின்றனா். எனவே, மோசடி நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் மற்றும் எனது நண்பா்களின் ரூ.73 லட்சத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...