புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!

பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது...

News image
பிளஸ் 2 பொதுத் தோ்வு- PTI
Updated On :2 மார்ச் 2026, 2:23 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழுவதும் 8,16,289 மாணவ, மாணவி​கள் எழுதவிருந்தனர். பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு தமிழகத்தில் 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்நிலையில், மொத்த மாணவர்களில் 9,919 பேர் இன்று பொதுத்தோ்வு எழுத வரவில்லை என்று அரசுத் தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழித் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு எளிமையாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. பத்தாம் வகுப்புத் தோ்வை 8,82,806 பேரும் எழுதவுள்ளனா்.

summary

9,919 out of 8.16 lakh students absent in the first exam of Plus 2 public examination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.