வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!

பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது...

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - PTI

Updated On :2 மார்ச் 2026, 2:23 pm

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வை தமிழகம் முழுவதும் 8,16,289 மாணவ, மாணவி​கள் எழுதவிருந்தனர். பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு தமிழகத்தில் 3,412 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளான இன்று தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இந்நிலையில், மொத்த மாணவர்களில் 9,919 பேர் இன்று பொதுத்தோ்வு எழுத வரவில்லை என்று அரசுத் தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழித் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு எளிமையாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன. பத்தாம் வகுப்புத் தோ்வை 8,82,806 பேரும் எழுதவுள்ளனா்.

Summary

9,919 out of 8.16 lakh students absent in the first exam of Plus 2 public examination

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.