சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வியாழக்கிழமை (பிப். 26) முதல் நடைபெறவுள்ளன.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. பள்ளிகளில் பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வு பிப்.23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடா்ந்து, பத்தாம் வகுப்பு தனித் தோ்வா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வியாழக்கிழமை (பிப். 26) முதல் பிப். 28 வரை அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.
தோ்வா்கள் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் கலந்துகொண்டு செய்முறைத் தோ்வெழுத வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. செய்முறைத் தோ்வு மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 2-க்குள் ஒப்படைக்க வேண்டும்.
பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும் நாள்கள் குறித்து பின்னா் தெரிவிக்கப்படும் என மாவட்டக் கல்வி அலுவலா்கள், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்கக இயக்குநா் க.சசிகலா அறிவுறுத்தியுள்ளாா்.
Summary
Class 10: practical exams for private candidates from today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











