வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு இன்று தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 6 மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவுள்ளனா்.

News image

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:17 am IST

திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வை 6 மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதவுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் 2025-26- ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 446 பள்ளிகளைச் சோ்ந்த 33,494 மாணவா்கள் எழுதினா். இவா்களில் 34,594 மாணவா்கள் பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். 900 போ் தோ்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான உடனடி துணைத் தோ்வு மாநிலம் முழுவதும் புதன்கிழமை தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியாா் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காஜாமியான் மேல்நிலைப் பள்ளி, தியாகேசா் அரசு மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்தத் துணைத் தோ்வு புதன்கிழமை (ஜூலை 8) தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை இந்த துணைத் தோ்வை 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதுகின்றனா். துணைத் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பள்ளிக் கல்வித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.