அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!

துபை விமான நிலையங்களிருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!

News image
துபையில் மீண்டும் விமான சேவை- AP
Updated On :2 மார்ச் 2026, 3:06 pm

இணையதளச் செய்திப் பிரிவு

துபை விமான நிலையங்களிருந்து, துபை நேரப்படி இன்று(மார்ச் 2) மாலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்நாட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளுக்காக விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை பயணிகள் எவரும் விமான நிலையங்களுக்கு வருகை தர வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானுடன் அமெரிக்கா, இஸ்ரேல் கூடாக சண்டையிட்டு வருகின்றன. இதையடுத்து, மத்திய கிழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக வான் வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 1) மூடப்பட்டன.

இந்நிலையில், துபை விமான நிலையங்களிருந்து, துபை நேரப்படி இன்று(மார்ச் 2) மாலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஃப்லை துபை, எமிரேட்ஸ் விமானங்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துபை விமான நிலைய அறிவுறுத்தல்கள்

துபை விமான நிலைய அறிவுறுத்தல்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.