ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடல்: மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம்!

மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
துபை சர்வதேச விமான நிலையங்கள்- @DXBMediaOffice
Updated On :28 பிப்ரவரி 2026, 3:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

துபையில் 2 சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் எவரும் அங்கு வருகை தர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலகின் அதிக விமான சேவைப் பயன்பாட்டை வழங்கும் துபையின் துபை இண்டர்நேஷனல் மற்றும் துபை வோர்ல்ட் செண்ட்ரல் - அல் மக்தௌம் இண்டர்நேஷனல் ஆகிய விமான நிலையங்களில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

விமான சேவை குறித்த அண்மைத் தகவல்களை அந்தந்த விமான நிறுவனங்களின் இணைய வலைதளங்களிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பார்த்து பயணிகள் தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை உள்பட அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள இந்தியp பயணிகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க யுஏஇ அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் தொடர்பிலிருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு அந்நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அபு தாபியில் உள்ள இந்திய தூதரகம் வெலியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Dubai Airports confirms that all flight operations at Dubai International (DXB) and Dubai World Central – Al Maktoum International (DWC) are suspended until further notice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.