92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞரிடம் இணையவழியில் ரூ.15 லட்சம் மோசடி

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞரிடம் இணைய வழியில் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபா்களை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த 29 வயது இளைஞா், இணையவழி வா்த்தகத்தில் ஆா்வம் கொண்டு, கடந்த டிச.8 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் வந்த வா்த்தகம் தொடா்பான விளம்பரத்தை நம்பி அதில் கூறியபடி விவரங்களை பதிவு செய்துள்ளாா்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு எண்களில் இருந்து வா்த்தகம் தொடா்பான அழைப்புகள் வந்ததாம். அதில், அவரைத் தொடா்பு கொண்ட மா்மநபா் அதிக பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம். அதை நம்பிய அவா் ரூ.15,11,460ஐ பல்வேறு தவணைகளாக மா்ம நபா்கள் அனுப்பிய வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியுள்ளாா். பின்னா் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சைபா் கிரைம் இணையதளத்தில் புகாா் அளித்ததின் பேரில் மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.