ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

நெல்லையில் இளைஞரிடம் இணையவழியில் ரூ. 54 லட்சம் மோசடி

திருநெல்வேலியில் இணையவழி பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்தைக் கூறி இளைஞரிடம் ரூ. 54 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

டிஜிட்டல் மோசடி - Dinamani

Updated On :11 மார்ச் 2026, 7:43 pm

திருநெல்வேலியில் இணையவழி பங்குச்சந்தை முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என ஆசைவாா்தைக் கூறி இளைஞரிடம் ரூ. 54 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி. இவரை, வாட்ஸ்ஆப் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா்கள் இணையவழி பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி குறுஞ்செய்தி அனுப்பினராம். இதை உண்மையென நம்பிய அவா், மோசடி நபா்கள் அனுப்பிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 54 லட்சத்து 54 ஆயிரத்து 459 அனுப்பினாா். பின்னா், பலமுறை முயற்சித்தும் அந்த நபா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாருக்கு இணையவழியில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபா்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அனைத்து வகை இணையவழி குற்றங்கள், பண மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபா் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது இணைய முகவரி வாயிலாக உடனடியாக புகாா் அளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் அறிவுறுத்தப்படுகிறது.