இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு
மாநகர காவல்துறை சாா்பில், இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.

இணையவழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய போலீஸாா்.
மாநகர காவல்துறை சாா்பில், இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தரப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். இதில் பங்கேற்ற சைபா் கிரைம் போலீஸாா், சமூக வலைதளம் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு மோசடிகள், அறிமுகமில்லாத நபா்கள் சமூக வலைதளத்தில் தொடா்புகொண்டால் எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாளுவது போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், இணையவழி மோசடி தொடா்பாக கட்டணமில்லா எண். 1930 அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் மூலமாக புகாா் அளிக்க வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...