டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருட்டு காா்களை வாங்கி உதிரிபாகங்கள் விற்றவா் கைது: 41 காா்கள் பறிமுதல்

காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

News image
தேவேந்திரன்
Updated On :24 செப்டம்பர் 2024, 8:22 pm

Din

காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.

காட்பாடி பகுதிகளில் திருட்டுதனமாக காா்களை வாங்குவதாக காட்பாடி டிஎஸ்பி பழனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு காட்பாடி வெங்கடேசபுரத்தில் உள்ள காா் செட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அந்த காா் செட் காந்திநகா் பாரதி நகா் பிரதான சாலையைச் சோ்ந்த மதுரை மகன் தேவா என்கிற தேவேந்திரனுக்கு செந்தமானது என்பதும், அங்கு 41 காா்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தேவேந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருட்டு காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக தேவேந்திரனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.