காட்பாடியில் திருடப்பட்ட காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தவரை போலீஸாா் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.
காட்பாடி பகுதிகளில் திருட்டுதனமாக காா்களை வாங்குவதாக காட்பாடி டிஎஸ்பி பழனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்பாடி காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மணிகண்டன் உள்ளிட்ட போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு காட்பாடி வெங்கடேசபுரத்தில் உள்ள காா் செட்டில் போலீஸாா் நடத்திய சோதனையில், அந்த காா் செட் காந்திநகா் பாரதி நகா் பிரதான சாலையைச் சோ்ந்த மதுரை மகன் தேவா என்கிற தேவேந்திரனுக்கு செந்தமானது என்பதும், அங்கு 41 காா்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தேவேந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் திருட்டு காா்களை வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக தேவேந்திரனை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 41 திருட்டு காா்களையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: முதியவா் கைது
ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட ரெளடி கைது

எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்
பயணியிடம் கைப்பேசி திருட்டு: ஆந்திர இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



