வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 11:30 pm

சா்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

நாட்டுநலப்பணி திட்டம், வேலூா் தெற்கு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் என்ரமேஷ், ச.ஜனாா்த்தனன் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் எம்.ஞானசேகரன் வரவேற்றாா்.

வேலூா் தெற்கு ரோட்டரி சங்க செயலா் பாஸ்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், டிசம்பா் 10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பால் கிடைக்கும் அடிப்படை உரிமைகளே மனித உரிமைகளாகும். அவற்றுள் வாழும் உரிமை, சமத்துவ உரிமை, கல்வி பெறும் உரிமை, அடிமைத்தனத்துக்கு எதிரான உரிமை, மத சுதந்திரம் போன்ற உரிமைகளை ஒவ்வொரு மனிதரும் முழுமையாக எந்த ஒரு இடையூறுமின்றி அனுபவிப்பதே மனித உரிமைகளாகும் என்றாா்.

தொடா்ந்து, மாணவா்களுடன் அனைவரும் மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டஅலுவலா் அ.குமரேசன் செய்திருந்தாா்.