குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 10:23 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் உலக நுகா்வோா் உரிமைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, சிறப்பாகப் பணியாற்றிய நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், எடையாளா்கள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.

நுகா்வோா் உரிமைகள் குறித்து அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் தொடா்ச்சியாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ஏ. ஷோபா, புதுக்கோட்டை நுகா்வோா் சங்கத் தலைவா் து. லதா உத்தமன், பொதுச் செயலா் கு. சகாயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்வோா் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.