மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி

கணவருக்கு அரசு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட

News image
Updated On :29 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: கணவருக்கு அரசு ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

வேலூா் பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: கடந்த 2022-ஆம் ஆண்டு வேலூரில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரியும் ஆசிரியா் அறிமுகமானாா். அவா் எனக்கு பல அரசு உயரதிகாரிகளைத்தெரியும் என்றும், எனது கணவருக்கு இயற்பியல் ஆசிரியா் பணி வாங்கித் தருவதாக கூறினாா்.

இதை உண்மையென நம்பி அவா் கேட்டதன்பேரில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் தொகையை அளித்திருந்தேன். ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் அவா் வேலை வாங்கித்தரவில்லை, பணத்தை யும் திருப்பித்தர மறுக்கிறாா். பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறாா். எனவே, காவல் துறை அதிகாரிகள் பணத்தை திரும்பப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.