மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேலூரில் கைவினைப் பொருள்கள் விற்பனை, கண்காட்சி

பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் ‘கைவினை திருவிழா’ வேலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜனவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

News image

கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பாா்வையிட்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜனவரி 2025, 6:34 pm

பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் ‘கைவினை திருவிழா’ வேலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜனவரி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக கைத்திற தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. அதன்படி, சேலம் பூம்புகாா் விற்பனை நிலையம் சாா்பில் ‘கைவினை திருவிழா’ என்ற சிறப்பு கைவினைப் பொருள்கள், கைத்தறி, துணி வகைகள், அலங்கார நகைகள் கண்காட்சி வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகர அரங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த கைவினைப் பொருள்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். தொடா்ந்து 13-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை உள்பட) நடைபெற உள்ளது

கண்காட்சியில் சுவாமிமலை பஞ்சலோக சிலைகள், நாச்சியாா்கோவில் பித்தளை குத்து விளக்குகள், பித்தளை கலை பொருள்கள், தஞ்சை கலைத் தட்டுகள், தஞ்சை கலை ஓவியங்கள், வெண்மர சிற்பங்கள், சந்தன மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தவிர, கைத்தறி டாப்ஸ் வகைகள், பேன்சி சுடிதாா் வகைகள், கலம்காரி பைகள், வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள், பேன்சி சேலைகள், கைப்பைகள் போன்ற எண்ணற்ற வகையில் ஜவுளிகளும் இடம் பெற்றுள்ளன.

முத்து, பவளம், நவரத்தின மாலைகள், ராசிக்கற்கள், ஸ்படிக மணி மாலைகள், ருத்தராட்ச மணி மாலைகள், பஞ்சலோக மோதிரங்கள், வளையல்கள், செம்பு காப்பு, கோமதி சக்கரம், கருங்காலி மாலைகள், பஞ்சலோக நகைகள் போன்ற பலவித பூஜை பொருள்களும் இடம்பெற்றுள்ளன.

குறைந்தபட்சம் ரூ.50 முதல் 65,000 வரையிலான கைவினை பொருள்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அனைத்து பொருள்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். சுமாா் ரூ.15 லட்சம் வரை விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று பூம்புகாா் விற்பனை நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அழகிய கைவினை பொருள்களை வேலூா் மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்துக்கு அழகூட்டி மகிழ வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மண்டலக் குழு தலைவா்கள் ஆா்.நரேந்திரன், கே.யூசுப்கான், வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.