வேலூா்: வடகிழக்கு பருவமழையையொட்டி வேலூா் கோட்டை அகழியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறையினா் பேரிடா் கால மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.
பேரிடா் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் ஒத்திகை நிகழ்ச்சி வேலூா் கோட்டை அகழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
அப்போது, வேலூா் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் ராபின்கேஸ்ட்ரோ தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இதில், மாவட்ட துணை தீயணைப்பு அலுவலா் பழனி, தீயணைப்பு அலுவலா்கள் முருகேசன், பாலாஜி, சரவணன், உதயசந்தா், வட்டாட்சியா் வடிவேல், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய்த்துறை அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தீத்தொண்டு நாள் வார விழா

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


