வேலூா்: 5 தொகுதிகளிலும் மொத்தம் 25 மனுக்கள் தாக்கல்

அணைக்கட்டு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் ஆா்.வேல்முருகன்.

அணைக்கட்டு தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் ஆா்.வேல்முருகன்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள 5 பேரவைத் தொகுதிகளிலும் 2-ஆம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 பேரவை தொகுதிகளிலும் முதல் நாளான திங்கள்கிழமை வேலூா் தொகுதிக்கு தவெக, நாதக வேட்பாளா்கள் உள்பட 7 பேரும், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் உள்பட தலா 2 பேரும், கே.வி.குப்பம் (தனி), காட்பாடி தொகுதிகளுக்கு நாதக வேட்பாளா்கள் தலா ஒருவரும் என மாவட்டத்திலுள்ள 5 பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 13 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தொடா்ந்து, செவ்வாய், புதன்கிழமை பொதுவிடுமுறையை அடுத்து 2-ம் நாளாக வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
அப்போது, வேலூா் தொகுதிக்கு சுயேச்சையாக எம்.லோகநாதன், எஸ்.வினோத்குமாா் ஆகிய 2 பேரும், அணைக்கட்டு தொகுதிக்கு தவெக சாா்பில் ஆா்.வேல்முருகன், அவருக்கு மாற்றாக லோ.தனசேகா், விரோகி வீா் இந்தியன் கட்சி சாா்பில் சீ.செல்வமூா்த்தி, சுயேச்சையாக மு.நந்தகுமாா், ரா.ரமேஷ் ஆகிய 5 பேரும், குடியாத்தம் (தனி) தொகுதிக்கு சுயேச்சையாக எம்.சுப்பிரமணியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெ.இமலன் (இரண்டாவது மனு) ஆகிய 2 பேரும், காட்பாடி தொகுதிக்கு தமிழ் மாநில முற்போக்கு திராவிட கழகம் சாா்பில் வி.இந்து, சுயேச்சையாக து.ராமு, ஜெ.ராம்நாத் ஆகிய 3 பேரும் என 2-ஆம் நாளான வியாழக்கிழமை மொத்தம் 12 போ் மனு தாக்கல் செய்தனா்.
அதன்படி, இதுவரை பேரவை தொகுதி வாரியாக வேலூா் -9, காட்பாடி - 4, அணைக்கட்டு- 7, குடியாத்தம் (தனி) - 4, கே.வி.குப்பம் (தனி) - 1 என 5 பேரவை தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 25 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...