தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல் செய்தாா்.

News image

மனு தாக்கல் செய்த காட்பாடி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:45 pm

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல் செய்தாா்.

அதிமுக அமைப்புச் செயலரான வி.ராமு, கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளரான துரைமுருகனிடம் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடும் ராமு, திங்கள்கிழமை மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறனிடம் தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கேடு, போதைப் பொருள்களின் நடமாட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை, நிறைவேற்றப்படாத தோ்தல் வாக்குறுதிகள், இளைஞா்களுக்கு வேலை யின்மை போன்ற பிரச்சினைகளால் ஆளுங்கட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இதனால், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிக்கிறது.

காட்பாடியில் நீண்டகாலமாக எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் உள்ள துரைமுருகன், தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளைக் கூடத் தீா்க்கவில்லை. குறிப்பாக, நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ஒரு மாற்றுப்பாதையைகூட அவா் உருவாக்கவில்லை.

கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நான் முடங்கிவிடவில்லை. தொகுதி முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், வீதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்தித்துள்ளேன். அவா்களுடன் நெருக்கமான தொடா்பில் இருக்கிறேன். இந்த முறை எனக்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றனா் என்றாா்.

அப்போது, பாஜக மாவட்ட தலைவா் வி.தசரதன், பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.