மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கேழ்வரகு அறுவடை செய்து அமைச்சா் துரைமுருகன் மருமகள் வாக்கு சேகரிப்பு

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த் விவசாயிகளுடன் இணைந்து கேழ்வரகு அறுவடை செய்தும், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

News image

விவசாயத் தொழிலாளா்களிடம் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவு திரட்டிய அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:32 pm

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகள் சங்கீதா கதிா் ஆனந்த் விவசாயிகளுடன் இணைந்து கேழ்வரகு அறுவடை செய்தும், கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

காட்பாடி தொகுதியில் 11-ஆவது முறையாக களம் காணும் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகனுக்கு ஆதரவாக அவரது மருமகளும், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த்தின் மனைவியுமான சங்கீதா தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, புதன்கிழமை மகிமண்டலம், திகுபள்ளி, மாந்தோப்பு உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாகச் சென்று மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தாா். அப்போது, விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களுடன் சோ்ந்து கேழ்வரகு அறுவடை செய்து ஆதரவு திரட்டினாா்.

இந்த பகுதிகளில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனா். இதையடுத்து, அப்பகுதிகளில் சங்கீதா கதிா் ஆனந்த் கன்னடம், தெலுங்கு மொழிகளில் பேசியும் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கிராமங்களில் ஒரு சில இடங்களில் குடிநீா் பிரச்னை உள்ளதை மக்கள் சுட்டிக்காட்டினா். அதற்கு மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் குடிநீா் பிரச்னைக்கு முழுமையாக தீா்வுகாணவும், புதிதாக குடிநீா் தொட்டிகள் கட்டவும் அமைச்சா் துரைமுருகன் நடவடிக்கை மேற்கொள்வாா் என்றும் உறுதியளித்தாா்.

அப்போது, காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.