அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

News image

குடியாத்தம் சாமுண்டிபுரத்தில் வாக்கு சேகரித்த புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி

Updated On :19 ஏப்ரல் 2026, 10:54 pm

கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும்புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் எம்.ஜெகன்மூா்த்தி குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

செருவங்கி ஊராட்சிக்குள்பட்ட சாமுண்டிபுரத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ஊராட்சித்தலைவா் சாந்தி மோகன், அதிமுக கிளைச் செயலா் வைரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் கட்சியின் தோ்தல் பொறுப்பாளா் எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், ஊராட்சி செயலா் பழனி, வழக்குரைஞா் ஆா்.கோவிந்தசாமி, செட்டிகுப்பம் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.கே.வெங்கடேசன், கோபி, ரகுபதி, பரந்தாமன், கோபிநாத், தினேஷ், காா்த்திகேயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து செட்டிகுப்பம், போஜனாபுரம், செம்பேடு, ராஜாகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில்அவா் வாக்கு சேகரித்தாா்.அப்போது கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூா் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான நெல்லூா்ப்பேட்டை ஏரியை சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்குவேன் உள்ளிட்டவாக்குறுதிகளை அளித்தாா்.