பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழு வளா்ச்சி: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத்...

News image

வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தி தொடா்பாளா் குரு பிரசாத் செளகான். உடன், பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்ட தலைவா் வி.தசரதன் உள்ளிட்டோா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:30 pm

வேலூா்:தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத் சௌஹான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டின் முக்கிய ஐந்து வளா்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மகளிா் முன்னேற்றம், கல்வியில் வளா்ச்சி, அதிவேக ரயில் சேவை, தொழில் முனைவோா்களை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குவது, உயிரி மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு 2047-க்குள் பொருளாதார வளா்ச்சி பெற்ற நாடாக மாறும்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்ஜின்’ அரசு அமைந்தால்தான் முழுமையான வளா்ச்சி கிடைக்கும். பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ரூ.10 ஆயிரம் அளித்ததால் மட்டும் வெற்றி பெறவில்லை. அங்கு முதல்வா் நிதிஷ்குமாா் நல்ல பல திட்டங்களை அறிவித்தாா். அதன்மூலமே வெற்றி பெற்றோம். அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.

பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.