வேலூா்:தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத் சௌஹான் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வேலூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய நிதிநிலை அறிக்கை நாட்டின் முக்கிய ஐந்து வளா்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மகளிா் முன்னேற்றம், கல்வியில் வளா்ச்சி, அதிவேக ரயில் சேவை, தொழில் முனைவோா்களை அதிகரிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெருக்குவது, உயிரி மருத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு 2047-க்குள் பொருளாதார வளா்ச்சி பெற்ற நாடாக மாறும்.
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் ‘இரட்டை எஞ்ஜின்’ அரசு அமைந்தால்தான் முழுமையான வளா்ச்சி கிடைக்கும். பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ரூ.10 ஆயிரம் அளித்ததால் மட்டும் வெற்றி பெறவில்லை. அங்கு முதல்வா் நிதிஷ்குமாா் நல்ல பல திட்டங்களை அறிவித்தாா். அதன்மூலமே வெற்றி பெற்றோம். அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.
பாஜக மாநில பொதுச்செயலா் ப.காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் வி.தசரதன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஏழைகளின் பணத்தை கொள்ளையடிக்கும் திமுக அரசு! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

தமிழகத்தில் மீண்டும் இரட்டை என்ஜின் அரசு தேவை: ஜி.கே. வாசன்

பாஜக செய்தித் தொடா்பாளராக ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் நியமனம்

புதுச்சேரியில் காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரை முடிவு செய்யவில்லை: தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


