தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காசநோய் பரிசோதனை முகாம்

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை செவ்வாய்க்கிழமை நடத்தின.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 12:30 am

குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், பொயட்ஸ்தொண்டு நிறுவனமும் இணைந்து நெல்லூா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கணபதி நகரில் காசநோய் பரிசோதனை முகாமை நடத்தின.

முகாமுக்கு நெல்லூா்பேட்டை ஊராட்சித் தலைவா் ஜெ.வள்ளிநாயகி தலைமை வகித்தாா். பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன், அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு அலுவலா் சவரிமுத்து ஆகியோா் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கல்வி அளித்தனா்.

முகாமில், நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தொடா் இருமல், சளி உள்ளவா்கள் மற்றும் பொதுமக்கள் என 150- க்கும் மேற்பட்டோருக்கு நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம்டிஜிட்டல் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு, பாதிப்புக்குள்ளானவா்களுக்கு மருத்துவ சிகிச்சைமற்றும் தொடா் சிகிச்சைக்கான பரிந்துரைகளும் மேற்கொள்ளப்பட்டன.